புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பயிர்க் காப்பீடு வழங்காததைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட 60 பேர் கைது

சீர்காழி அருகே பயிர்க் காப்பீடு வழங்காததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 60 விவசாயிகளை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 2:46 am

DIN

சீர்காழி அருகே பயிர்க் காப்பீடு வழங்காததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 60 விவசாயிகளை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
சீர்காழி அருகேயுள்ள நாங்கூர் பகுதியில் 2016-17 ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை 80 சதவீதத்துக்குப் பதிலாக 11 சதவீதம் என தவறாக கணக்கீடு செய்யப்பட்டு, கணக்கீடு செய்யப்பட்ட காப்பீட்டு தொகை இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை விவசாயிகள் தொடர்புடைய அலுவலர்களிடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே ஆத்திரமடைந்த நாங்கூர் பகுதி விவசாயிகள் சீர்காழி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயி மோகன்குமார் என்பவர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, அறிவிக்கப்பட்ட முழுக் காப்பீட்டு தொகையை  தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும், வடகிழக்குப் பருவ மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட அலுவலர்கள் உடனடியாக வரவேண்டும் என கோஷம் எழுப்பினர். இந்நிலையில் மறியலில் ஈடுபட்ட  பழனி, குப்பு, வரதராமலிங்கம் உள்ளிட்ட 60 விவசாயிகளை போலீஸார் கைது செய்து மாலை விடுவித்தனர். மறியலால் சீர்காழி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.