மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வழிப்பறி செய்யத் திட்டம்: 5 பேர் கைது

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் மேலமுக்கூட்டுப் பகுதியில் வழிப்பறி செய்யத் திட்டமிட்டிருந்ததாக 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:11 am

DIN

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் மேலமுக்கூட்டுப் பகுதியில் வழிப்பறி செய்யத் திட்டமிட்டிருந்ததாக 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் நாகரெத்தினம், மேலமுக்கூட்டுப் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த 5 பேரிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் உருட்டுக் கட்டை, மிளகாய்ப் பொடி, கருப்புத்துணி ஆகியவற்றை கையில் வைத்துக்கொண்டு வழிப்பறி செய்யத் திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வழிப்பறி செய்யத் திட்டமிட்டிருந்த மயிலாடுதுறை வட்டம், கேசிங்கன் வடக்குத் தெருவைச் சேர்ந்த மு. சரவணன் (28), ஆத்தூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சா. செல்லத்துரை (35), வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜெ. சேகரன்(35), பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த மு. ராமலிங்கம் (53) மற்றும் ரெ. சாமி (63) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,  போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.