வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மின் மோட்டார்கள் பறிமுதல்

சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் முறைகேடாக தண்ணீர் எடுக்க பயன்படுத்திய 9 மின் மோட்டார்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்து இணைப்பைத் துண்டித்தனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:12 am

DIN

சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் முறைகேடாக தண்ணீர் எடுக்க பயன்படுத்திய 9 மின் மோட்டார்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்து இணைப்பைத் துண்டித்தனர்.
கொள்ளிடம் பகுதியில் ஒன்றிய ஆணையர் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு உதவியாளர் ரவி, ஊராட்சி செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் கொள்ளிடம் கூட்டு குடிநீர்க் குழாய்கள் மூலம் குடிநீர் முறையாகச் சென்று சேருகிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது புதுப்பட்டினம், தற்காஸ், தோணித்துறை ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி, மின் மோட்டார்கள் மூலம் குடிநீரை திருடப்படுவது தெரிய வந்ததையடுத்து, அந்த 9 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.