இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அனுமதியின்றி மணல் அள்ளிய 7 வாகனங்கள் பறிமுதல்

நாகை அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக 5 டிப்பர் லாரி, 2 டிராக்டர்  என 7 வாகனங்கள் புதன்கிழமை பறிமுதல்  செய்யப்பட்டன.  மேலும்  வாகனங்களை இயக்கிய 7 பேர்  கைது  செய்யப்பட்டனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:16 am

DIN

நாகை அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக 5 டிப்பர் லாரி, 2 டிராக்டர்  என 7 வாகனங்கள் புதன்கிழமை பறிமுதல்  செய்யப்பட்டன.  மேலும்  வாகனங்களை இயக்கிய 7 பேர்  கைது  செய்யப்பட்டனர்.
நாகை அருகே செம்பியன்மகாதேவியில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்திலிருந்து உரிய அனுமதியின்றி வாகனங்களில் மணல் எடுத்துச் செல்வதாக கோயில் நிர்வாக அலுவலர்  கோவிந்தராஜனுக்கு  தகவல்  கிடைத்தது.  இதுகுறித்து   அவர்  வேளாங்கண்ணி  போலீஸாரிடம்  புகார்  அளித்தார்.    
இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சோதனை நடத்தினர்.  அப்போது   கோயிலுக்கு  சொந்தமான  நிலத்திலிருந்து  5 டிப்பர் லாரி, 2 டிராக்டர்களில்   மணல்  எடுத்துச்  செல்வது  தெரிய  வந்தது.  இதையடுத்து   அவை அனைத்தும்  பறிமுதல்  செய்யப்பட்டன.  
மேலும் டிப்பர் லாரிகளை ஓட்டி வந்த திருத்துறைப்பூண்டி, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கருணாநிதி (35), நடராஜன் (34), திருச்சி, துவாக்குடியைச் சேர்ந்த ராஜா (32), தஞ்சை, பூதலூரைச் சேர்ந்த கதிரவன் (36), பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் (31) ஆகியோரையும்,  டிராக்டரை ஓட்டி வந்த தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த அழகுசெல்வம் (24), சிவக்குமார் (42)  என மொத்தம்  7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.