டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தக்கோரி  நாகப்பட்டினத்தில் விடுதலைச்  சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தக்கோரி  நாகப்பட்டினத்தில் விடுதலைச்  சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.
  நாகை அவுரித்திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நாகை தெற்கு மாவட்டச் செயலர் க. பரிமளச்செல்வன் தலைமை வகித்தார்.  இதில் வடக்கு மாவட்டச் செயலர் ப. ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ப. கதிர்நிலவன், மாவட்ட செய்தி தொடர்பாளர் த. பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
  டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல்களைத்  தடுக்க தவறியதாகக்  கூறி மத்திய,  மாநில அரசுகளைக் கண்டித்து  இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com