பேருந்து மோதி இருவர் சாவு

நாகப்பட்டினத்தில் தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.
Updated on
1 min read

நாகப்பட்டினத்தில் தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர்.
தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (34), நாகூர் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேலு (39). இவர்கள் இருவரும் புதன்கிழமை அதிகாலை கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து நாகை சாலைக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.
வடக்கு பால் பண்ணைச்சேரி அருகே சாலைக்கு வரும்போது தனியார் பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில் பிரகாஷ், சிங்காரவேலு இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து நாகூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com