ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியை கூடுதலாக வழங்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நாகூர் தர்கா பரம்பரை ஆதினம் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் பாராட்டு தெரிவித்தார்.
ஆண்டுதோறும் தமிழக அரசு இஸ்லாமிய மக்களுக்காக, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான விலையில்லா அரிசியை பள்ளி வாசல்களுக்கு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு 4,600 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டது. நிகழாண்டில் கூடுதலாக 300 மெட்ரிக் டன்
பச்சரிசி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதற்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சி நிர்வாகத்தினர், நோன்பு பிறைக்கு முன்பாகவே தமிழக அரசின் விலையில்லா அரிசியை உரிய பள்ளிவாசல், தர்கா, தைக்காலுக்கு சேர்க்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்






