வேதாரண்யத்தில், திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட குடிக்காணி மற்றும் குத்தகை சாகுபடிதாரர்கள் விவசாயப் பாதுகாப்பு சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் சா. பாஸ்கரன் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் மு. கலிதீர்த்தான், நிர்வாகிகள் தமிழழகன், எம்.ஆர். சுப்பிரமணியன், அமைப்புச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சங்கத்தின் கௌரவத் தலைவர் கவிஞர் புயல் குமார், பொருளாளர் அருள்ஜோதி, நிர்வாகிகள் சேகர், பாலசுப்பிரமணியன், கணேசன், மாரிமுத்து, கருணாநிதி, சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
தீர்மானங்கள், முடிவுகள்: நாகை மாவட்ட பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவது, குடிக்காணி குத்தகை நிலங்கள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு பொருந்தாத வகையில் செயல்படும் அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு நீதிமன்ற தடை கோருவது, 2016-17 -ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி ஏப். 15 -இல் வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. இதேபோல், உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று, மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காங்கிரஸ் மீதான திமுக அதிருப்தி விரைவில் சரிசெய்யப்படும்: காங்கிரஸ் எம்.பி.

இன்றைய செய்திகள் ஜூன் 8 - நேரலை!

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் தில்லியில் ஆலோசனை!

இந்தியாவின் ஏற்றுமதி 15% அதிகரிப்பு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


