பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோவைகோ, அன்புமணி ராமதாஸைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

மயிலாடுதுறையில் சிறுதொண்ட நாயனார்அமுதுப் படையல் வழிபாடு

மயிலாடுதுறை அர்த்தநாரீஸ்வரர் சுவாமி கோயில் மற்றும் ருத்ராபதி சுவாமி கோயிலில் அமுதுப் படையல் வழிபாடு  நடைபெற்றது.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:55 am IST

மயிலாடுதுறை அர்த்தநாரீஸ்வரர் சுவாமி கோயில் மற்றும் ருத்ராபதி சுவாமி கோயிலில் அமுதுப் படையல் வழிபாடு  நடைபெற்றது.
மயிலாடுதுறை கூரைநாடு பகுதி தணியூர் வாணியத் தெருவில் அருள்பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரர் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சிறுதொண்ட நாயனார் அமுதுப் படையல் ஐதீக விழா நடைபெற்றுவருகிறது. 
அதன்படி 63-ஆம் ஆண்டு அமுதுப் படையல் ஐதீக விழாவையொட்டி திங்கள்கிழமை பால்குடம் மற்றும் காவடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சுவாமிக்கு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் பிற்பகலில் அன்னதானமும், இரவில் சீராளன் பல்லக்கில் ஊர்வலம் வரும் நிகழ்ச்சியும்  நடைபெற்றது. தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை  சீராளன் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் ஆர். ஆறுமுகம், எஸ். சுவாமிநாதன்,  எஸ். ரவிச்சந்திரன், வி. முருகன், எஸ். ராஜா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.  
இதேபோல் 5-ஆம் புதுத்தெருவில் உள்ள  அருள்மிகு ருத்ராபதி சுவாமி  கோயிலில் சிறுத்தொண்ட நாயனார் அமுதுப் படையல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அருள்மிகு அபயாம்பிகை  உடனுறை மயூரநாதர் திருக்கோயிலிலிருந்து பால்குடங்கள், காவடிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ருத்ராபதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.