நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சகோதரர் வீட்டில் திருடியவர் கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே சகோதரர் வீடு உள்ளிட்ட இரு இடங்களில் நகை, பணம், நெல் திருடியதாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:53 am IST

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே சகோதரர் வீடு உள்ளிட்ட இரு இடங்களில் நகை, பணம், நெல் திருடியதாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பிராந்தியங்கரை ஊராட்சி, அண்டகத்துறை, கொள்ளிமேட்டுத்திடல் பகுதியைச் சேர்ந்த காத்தான் மகன்கள் ரமேஷ் (35), சங்கர் (32). இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், ரமேஷ், அவரது மனைவி பொன்னம்மாள் உள்ளிட்டோர் கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டனர்.  இதனால், பூட்டியிருந்த அவர்களது வீட்டின் பின்பக்கமாகச் சென்ற சங்கர், ஒரு கிராம் மோதிரம்-2, ரூ.19,500 ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றாராம். இதுகுறித்து கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் பொன்னம்மாள் புகார் அளித்தார். விசாரணையில், மகாராஜபுரம் மேற்குக் கிராமத்தில் உள்ள உமாபாலன் வீட்டில், சங்கர் ஒரு மூட்டை நெல் திருடியதும் தெரியவந்தது.
இந்த இரு சம்பவங்கள் குறித்தும் போலீஸார் வழக்குப் பதிந்து, சங்கரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.