சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

2 ஆண்டுகளாக காலியாக உள்ள வேளாண் விரிவாக்க மையக் கிடங்கு மேலாளர் பணியிடம்

நாகை மாவட்டம், சீர்காழி, திருவெண்காடு ஆகிய பகுதிகளில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

நாகை மாவட்டம், சீர்காழி, திருவெண்காடு ஆகிய பகுதிகளில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள கிடங்கு மேலாளர் பணியிடத்தை உடனடியாக நிரப்பிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழி வேளாண் விரிவாக்க மையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடங்கு மேலாளர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், விவசாயிகள் உரிய நேரத்தில் வேளாண் இடுபொருள்களை வாங்க முடியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். மேலும், வேளாண் பொருள்களுக்கு ரசீது இல்லாமல், விவசாயிகள் வாங்கிச் செல்வதால், முறைகேடுகள் அரங்கேற வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கருதுகின்றனர். 
இதேபோல், திருவெண்காடு வேளாண் அலுவலகத்திலும் கிடங்கு மேலாளர் பணியிடம் கடந்த 2 ஆண்டுகளாக காலியாக உள்ளது. தற்போது, இந்த இரு பணியிடங்களையும் வைத்தீஸ்வரன்கோயில் வேளாண் விரிவாக்க மையக் கிடங்கு மேலாளர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். ஆகையால், சீர்காழி, திருவெண்காடு பகுதிகளில் காலியாக உள்ள வேளாண் விரிவாக்க கிடங்கு மேலாளர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.