
விவசாயிகள் சாலை மறியல்
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் இயக்கு அணைக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கக் கோரி, விவசாயிகள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தாணிக்கோட்டகம் இயக்கு அணைக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கக் கோரி, விவசாயிகள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
வேதாரண்யம்- திருத்துறைப்பூண்டி பிரதான சாலை, செங்காதலைப் பாலம் பகுதியில் நடைபெற்ற மறியலுக்கு தாணிக்கோட்டகம் திமுக செயலாளர் சோழநம்பி, நகரச் செயலாளர் புகழேந்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.
தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் தமிழ்ச்செல்வம், பணி ஆய்வாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முள்ளியாற்றில் முதல்கட்டமாக 700 கனஅடி தண்ணீர் திறந்துவிட உறுதியளிக்கப்பட்டதால், மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





