
சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு
சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, பரமபத வாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி, பரமபத வாசல் திறப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா டிச. 8-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பகல் பத்து உத்ஸவம் திங்கள்கிழமை நிறைவு பெற்றதையடுத்து, பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத உத்ஸவர் திருவிக்கிரமநாராயண பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் பரமபத வாசலுக்கு எழுந்தருளினார். அப்போது, கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷமிட்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
இதேபோல், சீர்காழி அருகே உள்ள எருக்கூர் லெட்சுமி நாராயண பெருமாள், அண்ணன்கோயில் கிராமத்தில் அருள்பாலிக்கும் அண்ணன் பெருமாள், வடரெங்கம் ரெங்கநாதர், நாங்கூர் செம்பொன்னரங்கர் பெருமாள் ஆகிய கோயில்களிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





