ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

கூட்டுறவு சங்கம் மூலம் காப்பீட்டுத் தொகை அளிப்பு

வேதாரண்யம் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் சுகாதாரத் துறையில் பணியாற்றி காலமான பணியாளர்

Updated On :25 டிசம்பர் 2018, 8:46 am IST

வேதாரண்யம் பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் சுகாதாரத் துறையில் பணியாற்றி காலமான பணியாளர் ஒருவரது குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் காப்பீட்டுத் தொகையாக திங்கள்கிழமை வழங்கப்பட்டது. 
தலைஞாயிறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரப் பணியாளராக பணியாற்றிய கு. கந்தசாமி அண்மையில் காலமானார். இவர், உறுப்பினாரக அங்கம் வகித்து வந்த வேதாரண்யம் வட்ட அரசுப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் மூலம் நிர்வகிக்கப்பட்ட எஸ்.பி.ஐ ஆயுள் காப்பீட்டுத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை இறந்தவரின் மகன் கே. சுகுமாறனிடம் கூட்டுறவு சங்கத் தலைவர் நா. வேதமூர்த்தி வழங்கினார். அப்போது, துணைத் தலைவர் ஆர். வைத்தியநாதன், செயலாளர் தி. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.