ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பிற கட்சிகளிலிருந்து விலகியவர்கள் பாமகவில் இணையும் நிகழ்ச்சி

திருவெண்காட்டில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவர்கள் பா.ம.க. வில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:09 am

DIN

திருவெண்காட்டில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவர்கள் பா.ம.க. வில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவெண்காடு பகுதியில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய சுமார் 100 பேர், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் நடராஜன் தலைமையில் பா.ம.க.வில் இணையும் நிகழ்ச்சி, நாகை வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் லண்டன் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்புச் செயலாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சங்கர் வரவேற்றார்.
 நிகழ்ச்சியில்  பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு, கட்சியில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். இதில், முன்னாள் ஒன்றியச் செயலாளர் தேக்கு தியாகராஜன், ஒன்றியத் தலைவர் கார்த்திக், இளைஞரணி செயலாளர் சுமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றியச் செயலாளர் ராஜீவ்காந்தி நன்றி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.