புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பெண் தற்கொலை முயற்சி: கந்துவட்டிக் கொடுமையா?

நாகையைச் சேர்ந்த பெண் அதிகளவிலான மாத்திரைகளை உட்கொண்டு சனிக்கிழமை இரவு தற்கொலைக்கு முயன்றார். இவரது தற்கொலை முயற்சிக்குக் கந்துவட்டிக் கொடுமை காரணம் எனக் கூறப்படுகிறது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:11 am

DIN

நாகையைச் சேர்ந்த பெண் அதிகளவிலான மாத்திரைகளை உட்கொண்டு சனிக்கிழமை இரவு தற்கொலைக்கு முயன்றார். இவரது தற்கொலை முயற்சிக்குக் கந்துவட்டிக் கொடுமை காரணம் எனக் கூறப்படுகிறது.
நாகை பெருமாள் கோயில் தெற்கு மடவிளாகம் பகுதியைச் சேர்ந்த பாலகுமார் மனைவி தேன்மொழி(33). இவர், சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்த காய்ச்சல் மற்றும் பிற நோய்களுக்கான மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து, நாகை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இவர், வெளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் பணம் கடன் வாங்கியிருப்பதாகவும், அந்தப் பெண் தேன்மொழிக்கு கந்துவட்டி கொடுமை அளித்ததால் மனமுடைந்த தேன்மொழி தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.