தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உலகத் தாய் மொழி தினத்தை முன்னிட்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தினர் மயிலாடுதுறையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

உலகத் தாய் மொழி தினத்தை முன்னிட்டு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தினர் மயிலாடுதுறையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாட்டுக் கல்வி இயக்க நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பு. மகேசு தலைமை வகித்தார். 
தமிழே கல்வி மொழியாக இருக்கவேண்டும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே வேலை  வழங்க வேண்டும், தமிழ்நாட்டிற்கே கல்வி உரிமை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன், தமிழர் தேசிய முன்னணி நாகை மாவட்டத் தலைவர் இரா. முரளிதரன்,  திராவிடர் விடுதலைக் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் இளையராஜா, சாதி ஒழிப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், எஸ்டிபிஐ நாகை மாவட்டத் தலைவர்  ஷபீக் அஹமது உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com