மேட்டூரிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படவுள்ளதால், காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரத் தயாராக இருக்குமாறு நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
கர்நாடக மாநிலத்தில் நீடித்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அதிகரித்து, மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால், மேட்டூர் அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 22) இரவு 8.30 மணி முதல் விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் திறப்பு அளவு, திங்கள்கிழமை பகலுக்குள் விநாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரத் தயார் நிலையில் இருக்குமாறு ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக அமைச்சர்களைச் சந்தித்தார் பாடகர் வேடன்!

சச்சினுக்குப் பிறகு, சூர்யவன்ஷிக்கு முன்பு... ரிஷப் பந்த் குறித்து பேசிய முன்னாள் வீரர்!

இயக்குநர் பாரதிராஜாவுக்கு பாரத ரத்னா வழங்க தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை!

பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!


