தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

நூறு நாள் வேலை கோரி ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்த மக்கள் அதிகாரம் பெண்கள்

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நூறு நாள் வேலை வழங்க வலியுறுத்தி, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த நுற்றுக்கும் மேற்பட்ட

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நூறு நாள் வேலை வழங்க வலியுறுத்தி, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த நுற்றுக்கும் மேற்பட்ட   பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்து அதிகாரிகளிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மகாத்மா காந்தி நூறு நாள் வேலை உறுதியளிப்புத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மனு அளித்தனர்.
இதில், வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு, ஆதனூர் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பின் பெண்கள் பாதுகாப்புக் குழுத் தலைவி எஸ். செல்வி தலைமையிலான நூற்றுக்கும் மேலான பெண்கள்  பங்கேற்றனர்.
அவர்கள் அளித்த மனுவில் நூறுநாள் வேலை மறுக்கப்படுவதால் வேறு கூலி வேலை இல்லாமல் அவதியுறுவதாகவும், இந்த நிலை நீடித்தால் குழந்தைகளோடு தற்கொலைக்குத் தள்ளப்படும் அபாயச் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்தனர்.
சிறிது நேரம் முழக்கமிட்ட பெண்கள் காவல்துறை தொடர்ந்து அனுமதி மறுத்ததால் கோரிக்கை மனுவை அளித்துவிட்டுச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.