மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

குட்டிக் குழந்தைகளின் சாதனை முயற்சி: ஒன்றரை மணிநேரத்தில் ஆயிரம் விதைப் பந்துகள் தயாரிப்பு

சீர்காழி மழலையர் பள்ளியில் பயிலும் குட்டிக் குழந்தைகள், சாதனை முயற்சியாக ஆயிரம் விதைப் பந்துகளை ஒன்றரை மணிநேரத்தில் தயாரித்தனர்.

Updated On :29 மார்ச் 2018, 4:00 am

சீர்காழி மழலையர் பள்ளியில் பயிலும் குட்டிக் குழந்தைகள், சாதனை முயற்சியாக ஆயிரம் விதைப் பந்துகளை ஒன்றரை மணிநேரத்தில் தயாரித்தனர்.
மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கவும், மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தியும், சீர்காழி விஷன்பிளே மழலையர் பள்ளி சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, சாதனை முயற்சியாக இப்பள்ளியில் பயிலும் குட்டிக் குழந்தைகள் 30 பேர், சுமார் ஒன்றரை மணிநேரத்தில் ஆயிரம் விதைப் பந்துகளைத் தயார் செய்தனர். இந்த விதைப் பந்துகளை வரும் கோடை விடுமுறையில் விதைக்கும் வகையில், அனைத்து குழந்தைகளுக்கும் விநியோகிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் மலர்க்கொடி, ஆசிரியர் ஜேக்கப் ஞானசெல்வன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.