தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மே 25-இல் திருநாவுக்கரசர் திருவாரூர் மாவட்டம் வருகை

வரும் 25-ஆம் தேதி காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர், மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவாரூர் வருகிறார் என அக்கட்சியின் மாவட்டத் தலைவர் துரைவேலன்

News image
Updated On :14 மே 2018, 11:57 pm

DIN

வரும் 25-ஆம் தேதி காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர், மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவாரூர் வருகிறார் என அக்கட்சியின் மாவட்டத் தலைவர் துரைவேலன் கூறினார்.
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் கொரடாச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து மாவட்டத் தலைவர் துரைவேலன் கூறியது:
வரும் 25-ஆம் தேதி காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர், மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவாரூர் வருகிறார். அக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம்தாழ்த்தும் மத்திய அரசைக் கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் முறையைக் கண்டித்தும் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது தவிர தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் வீரமணி, திருவாரூர் நகரத் தலைவர் மடப்புரம் எம். சம்பத், விவசாயிகள் பிரிவு தலைவர் இளங்கோவன், மீனவர் அணி தலைவர் நிஜாம்மைதீன், எஸ்சி., எஸ்.டி., பிரிவு தலைவர் கதிர்வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.