மே 25-இல் திருநாவுக்கரசர் திருவாரூர் மாவட்டம் வருகை
வரும் 25-ஆம் தேதி காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர், மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவாரூர் வருகிறார் என அக்கட்சியின் மாவட்டத் தலைவர் துரைவேலன்


வரும் 25-ஆம் தேதி காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர், மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவாரூர் வருகிறார் என அக்கட்சியின் மாவட்டத் தலைவர் துரைவேலன் கூறினார்.
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் கொரடாச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து மாவட்டத் தலைவர் துரைவேலன் கூறியது:
வரும் 25-ஆம் தேதி காங்கிரஸ் மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர், மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவாரூர் வருகிறார். அக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம்தாழ்த்தும் மத்திய அரசைக் கண்டித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் முறையைக் கண்டித்தும் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது தவிர தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் வீரமணி, திருவாரூர் நகரத் தலைவர் மடப்புரம் எம். சம்பத், விவசாயிகள் பிரிவு தலைவர் இளங்கோவன், மீனவர் அணி தலைவர் நிஜாம்மைதீன், எஸ்சி., எஸ்.டி., பிரிவு தலைவர் கதிர்வேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...