நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவுக்குள்பட்ட பழுதடைந்த பெரம்பூர் காவல் நிலையத்தை அகற்றிவிட்டு, புதிய காவல் நிலையம் கட்டித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பூர் காவல் நிலைய வரம்பெல்லைக்குள் திருவிளையாட்டம், கொத்தங்குடி, நல்லடை, சேத்தூர், வழுவூர், மங்கநல்லூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.
இந்த காவல் நிலையம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காவல் நிலையத்தின் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு, காரைகள் பெயர்ந்து விழுகின்றன.
அத்துடன், மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே கசிவதால் காவலர்களும், புகார் அளிக்க வரும் பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். இதன் காரணமாக காவலர்கள் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் தற்காலிமாக காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதுமான இடவசதி கிடையாது. ஆகையால், பழைய காவல் நிலையக் கட்டடத்தை இடித்துத் தள்ளிவிட்டு, புதிய கட்டடம் கட்ட சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமமுக அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை! ரூ. 20 லட்சம் பறிமுதல்

டெக் மஹிந்திரா 4வது காலாண்டு நிகர லாபம் 16% உயர்வு!
திருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதி

சூரத் - மேற்கு வங்கம் இடையே இலவச ரயில் பயணம்? பாஜக மீது திரிணமூல் புகார்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

