நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ராஜீவ் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திங்கள்கிழமை அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On :21 மே 2018, 8:04 pm

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி, மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திங்கள்கிழமை அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
சந்தைப்பேட்டை பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள இந்திராகாந்தி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ஆர். கனகவேல் தலைமை வகித்தார்.
ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு மாவட்டத் தலைவர் ராஜகோபால் மாலை அணிவித்தார். இதைத்தொடர்ந்து, வன்முறை எதிர்ப்பு உறுதிமொழியை கட்சியினர் எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நெடுவை குணசேகரன், மாவட்ட துணைத் தலைவர் வடுகநாதன், மாவட்டச் செயலாளர்கள் டி. பாலசுப்ரமணியன், சங்கு கோபால், தொழிற்சங்கத் தலைவர் வி. பஞ்சன், நகர துணைத் தலைவர் சுகுமார், நகரச் செயலர் ராஜ்மோகன், மாவட்ட கமிட்டி உறுப்பினர் பாரத் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.