உயிர்நீத்த காவர்களுக்கு, காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு வீரவணக்கம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாகை ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பணிக் காலத்தின்போது, வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செய்யும் வகையில், ஆண்டுதோறும் அக்.21-ஆம் தேதி காவலர் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நிகழாண்டு காவலர் நினைவு தினத்தையொட்டி, நாகை மாவட்டக் காவல்துறை சார்பில், உயிர்நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் பங்கேற்று, காவலர் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து, பணிக் காலத்தின்போது, வீரமரணமடைந்த காவலர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர், மெளனஅஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் காவல் துணைக் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், ஊர்க்காவல் படை மண்டல தளபதி ஆனந்த், காவல் ஆய்வாளர்கள் செந்தில் குமார், சிவப்பிரகாசம் உள்ளிட்ட காவல் துறையினர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தகுந்த பாதுகாப்பில் வாக்குச்சாவடி மையங்கள்! காவல் கண்காணிப்பாளர் பேட்டி

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!

சென்சார் பிரச்னையைச் சந்தித்த பேட்ரியாட்?

கோவை தெற்கில் தேர்தலை நிறுத்தக்கோரி அதிமுக வேட்பாளர் தர்னா!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

