இபிஎஸ் ஓய்வூதியத்தின்கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தற்போது ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (EPS-05) வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத் தொகையான 1,000 ரூபாயால், அடிப்படை வாழ்க்கைச் செலவுகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, குறைந்தபட்ச தொகையை ரூ. 7,500-ஆக உயர்த்த வேண்டும் என தொழிலாளர் சங்கங்களும் ஓய்வூதியதாரர் சங்கங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த உயர்வுக்கான கோரிக்கையும் தொடர்ந்து வலுத்து வருகிறது.
இந்த நிலையில், ஓய்வூதியத் தொகையை உயர்த்த நாடாளுமன்றக் குழுவும் பரிந்துரைத்துள்ளது. இந்த முடிவு, நாட்டிலுள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.
இந்த ஓய்வூதிய மாற்றங்களுடன், நிதியாண்டு 2026ல் கணக்குதாரர்களின் வைப்புநிதியில் 8.25 சதவிகிதம் வட்டி வரவை வழங்கவும் வாய்ப்புள்ளது. இந்த முன்மொழிவு, நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் நிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், கணக்குதாரர்களின் கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்படும்.
இதனிடையே, பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Summary
EPFO may raise minimum pension under EPS-95
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமேஸானில் இருசக்கர வாகன விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு

என்எல்சி இந்தியா பங்கு விற்பனை: முதல் நாளில் 5 மடங்கு கூடுதல் விண்ணப்பம்

ரூ. 500 ஓய்வூதியத்துக்காக 90 வயது மாமியாரை 4 கி.மீ. தூக்கிச் சுமந்துவந்த பெண்! - விடியோ

ஜாக்பாட்! அடல் மாத ஓய்வூதிய தொகை உயர்த்தப்படுமா?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




