புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

ஆயக்காரன்புலம் மடாலயத்தில் கிருஷ்ணர் திருக்கல்யாணம்

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் முதலியார் குத்தகை ராதா ருக்மணி சமேத கிருஷ்ண மடாலயத்தில் கிருஷ்ணர் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:10 am

வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் முதலியார் குத்தகை ராதா ருக்மணி சமேத கிருஷ்ண மடாலயத்தில் கிருஷ்ணர் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டிநடைபெற்ற இத்திருக்கல்யாணத்துக்கு முன்னதாக, கருட வாகனத்தில் கிருஷ்ணர் வீதியுலா  நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் 51 தட்டுகளில் சீர்வரிசை பொருள்களுடன் ஊர்வலமாக வந்தனர். அவர்கள், கிருஷ்ண மடாலயத்தை வந்தடைந்ததும், ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணர் திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து, சுதர்சன ஹோமம், ஊஞ்சல் உதஸ்வம்  போன்ற வழிபாடுகள் நடைபெற்றன. வானவேடிக்கையும் நடத்தப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய கயிறு, லட்டு போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டன.  இதற்கான ஏற்பாடுகளைஆயக்காரன்புலம் முதலியார் குத்தகை கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.