தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் மையம் திறப்பு: அமைச்சர் திறந்துவைத்தார்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சி.டி. ஸ்கேன் மையம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:10 am

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சி.டி. ஸ்கேன் மையம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், சி.டி. ஸ்கேன் மையத்தைத்  திறந்து வைத்துப் பேசியது: 
மகப்பேறு சிகிச்சையில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை தமிழகத்தில் 5-ஆவது இடத்தில் உள்ளது. சிறுநீரக கோளாறு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க இங்கு 3 டயாலிசிஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல், வைரஸ் தாக்குதல் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்க மேலும் ஒரு டயாலிசிஸ் கருவிப் பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்பட்டுள்ள சி.டி. ஸ்கேன் மையத்தை இப்பகுதி மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
மயிலாடுதுறையில் ரூ. 38.50 கோடியில்  புதிய பேருந்து நிலையம் கட்ட, தமிழக அரசு அரசாணை வழங்கியுள்ளது. புறவழிச்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.
தொடர்ந்து, மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு  பல்வேறு வகையிலும் உதவி செய்து வரும் தன்னார்வலர்கள்,சேவை சங்கத்தினர்கள், வணிகர் சங்கத்தினர்களுக்கு  அமைச்சர் ஓ.எஸ். மணியன் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். 
நிகழ்ச்சியில்,  மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி  உறுப்பினர்  ஆர்.கே. பாரதிமோகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் வீ. ராதாகிருஷ்ணன், பி.வி.பாரதி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் குருநாதன், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் மகேந்திரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
மயிலாடுதுறை வருவாய்க் கோட்டாட்சியர் கோ. தேன்மொழி, வட்டாட்சியர் து.விஜயராகவன், மாயூரம் கூட்டுறவு நகர வங்கித் தலைவர் விஜிகே.செந்தில்நாதன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எம். சக்தி, ஏசிஎன்.விஜயபாலன், என். ரெங்கநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  
அரசு பெரியார் மருத்துவமனை குடிமை மருத்துவ அலுவலர்ஆர்.ராஜசேகரன் வரவேற்றார். முதுநிலை உதவி மருத்துவர் வி. வீரசோழன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.