புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கோகுலாஷ்டமி சிறப்பு வழிபாடு

நாகை மாவட்டம், சீர்காழி கதிர்காம சுவாமிகள் அதிஸ்டானம் மற்றும் பாண்டுரெங்கர் பஜனை மடத்தில் கோகுலாஷ்டமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:11 am

நாகை மாவட்டம், சீர்காழி கதிர்காம சுவாமிகள் அதிஸ்டானம் மற்றும் பாண்டுரெங்கர் பஜனை மடத்தில் கோகுலாஷ்டமி சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கோகுலாஷ்டமியையொட்டி, சீர்காழி தென்பாதியில் உள்ள கதிர்காம சுவாமிகள் அதிஸ்டானத்தில், தனி தன்னிதியில் அருள்பாலிக்கும் கிருஷ்ணர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அவல், பொட்டுக் கடலை, சர்க்கரை, சீடை, அதிரசம், வடை ஆகிய பொருள்களால் நிவேதனம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இதேபோல், பிடாரி தெற்கு வீதியில் உள்ள பாண்டுரெங்கர் பஜனை மடத்தில் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் உருவப்படத்துக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் மஞ்சள் தண்ணீர் ஊற்றி உறிஅடி நிகழ்ச்சியும், இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை எம்.சி.எஸ். சேகர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.