பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

துர்கா பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு

நாகை மாவட்டம், பூம்புகாரில் உள்ள பிரசித்தி பெற்ற துர்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

நாகை மாவட்டம், பூம்புகாரில் உள்ள பிரசித்தி பெற்ற துர்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பூம்புகார் துர்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம மக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரால் தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது, திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், குடமுழுக்கு விழா பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின. 
தொடக்க நிகழ்வாக விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி மற்றும் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. 
இதையடுத்து, ஐந்து கால யாக பூஜைகள் நடைபெற்றன. ஆறாம் கால யாக பூஜை வியாழக்கிழமை காலை தொடங்கியது. கிரகப்பிரிதி, கோமாதா பூஜை, யாத்ரா தானம், சுமங்கலி பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், மேள- தாளம் முழங்கிட புனித நீர் அடங்கிய யாக குடங்கள் புறப்பட்டு, கோயிலின் கோபுரத்தை அடைந்தது.
தொடர்ந்து, கோபுர கலசத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குடமுழுக்கு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராமச்சந்திரன், விழாக்குழுவினர் மற்றும் கிராமப் பொதுமக்கள் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.