தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கூட்டுறவு தணிக்கையாளர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

கூட்டுறவுத் துறை தணிக்கையாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்பின் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On :24 ஜனவரி 2019, 2:58 am IST

கூட்டுறவுத் துறை தணிக்கையாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்பின் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 
2018-19 ஆம் ஆண்டு கூட்டுறவுத் தணிக்கையாளர்களுக்கான 3 நாள் புத்தாக்கப் பயிற்சி, நாகையில் கூட்டுறவுத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது. இப்பயிற்சி வெள்ளிக்கிழமை (ஜன.25) நிறைவுபெறுகிறது. முதல் நாள் பயிற்சியை கூட்டுறவுத் துறை தணிக்கை திருச்சி மண்டல இணை இயக்குநர் ஆர். நீலவண்ணன் தொடங்கி வைத்தார். கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் க. அ. சண்முகம், கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி உதவி இயக்குநர் உமையொருபாகம், திருபுவனம் பட்டு, கைத்தறி உற்பத்தி நெசவாளர் கூட்டுறவு சங்க உதவி இயக்குநர் மா. சேகர்ஆகியோர் பேசினர். பயிற்சியில், நாகை மாவட்டத்தில் உள்ள  கூட்டுறவு தணிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.