நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! பனையூர் அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனைதவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!சி.வி. சண்முகம் அணி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!ஒரு தலித் முதல்வராகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை! திருமாவளவன்ஐயூஎம்எல் தலைவரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!
/

ஜவுளிக் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் 9 பேர் மீது கொலை முயற்சி வழக்கு

நாகூரில் ஜவுளிக் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் 9 பேர் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Updated On :23 ஜனவரி 2019, 9:26 am IST

நாகூரில் ஜவுளிக் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் 9 பேர் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
நாகை அருகேயுள்ள நாகூர் காதர்ஷா மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முஹம்மது உசேன் (40). இவர், சென்னையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்த முஹம்மது உசேன் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை, தனது ஜவுளிக் கடையில் வேலை செய்து வரும் நாகூர் ரெட்டைகம்மாளத் தெருவைச் சேர்ந்த பிரவீன் குமார் (20) என்பவரிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையில், நாகூர் பகுதியைச் சேர்ந்த முஸ்தாக், ரஹீம் மேலும் 2 பேர் பிரவீன் குமாரிடம், இருசக்கர வாகனத்தைக் கேட்டு தகராறு செய்தனராம். இதுகுறித்து, பிரவீன்குமார் நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவருக்கு ஆதரவாக முஹம்மது உசேன் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை நாகூர் பகுதியில், காரில் சென்றுக்கொண்டிருந்த முஹம்மதுஉசேனை வழிமறித்த ஒரு கும்பல், அரிவாளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததுடன் சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கார் கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, முஹம்மது உசேன் நாகூர் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் முஸ்தாக், ரஹீம், பிலால், தாரிக் உள்ளிட்ட 9 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.