மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

ஜவுளிக் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் 9 பேர் மீது கொலை முயற்சி வழக்கு

நாகூரில் ஜவுளிக் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் 9 பேர் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Updated On :23 ஜனவரி 2019, 9:26 am IST

நாகூரில் ஜவுளிக் கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் 9 பேர் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
நாகை அருகேயுள்ள நாகூர் காதர்ஷா மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முஹம்மது உசேன் (40). இவர், சென்னையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்காக ஊருக்கு வந்த முஹம்மது உசேன் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை, தனது ஜவுளிக் கடையில் வேலை செய்து வரும் நாகூர் ரெட்டைகம்மாளத் தெருவைச் சேர்ந்த பிரவீன் குமார் (20) என்பவரிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையில், நாகூர் பகுதியைச் சேர்ந்த முஸ்தாக், ரஹீம் மேலும் 2 பேர் பிரவீன் குமாரிடம், இருசக்கர வாகனத்தைக் கேட்டு தகராறு செய்தனராம். இதுகுறித்து, பிரவீன்குமார் நாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவருக்கு ஆதரவாக முஹம்மது உசேன் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், திங்கள்கிழமை நாகூர் பகுதியில், காரில் சென்றுக்கொண்டிருந்த முஹம்மதுஉசேனை வழிமறித்த ஒரு கும்பல், அரிவாளால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததுடன் சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள கார் கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, முஹம்மது உசேன் நாகூர் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் போலீஸார் முஸ்தாக், ரஹீம், பிலால், தாரிக் உள்ளிட்ட 9 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.