நாகையை அடுத்துள்ள மேல நாகூர் தர்காவின் கந்தூரி விழா கொடியேற்றம் மற்றும் சந்தனம் பூசும் விழா ஆகியன செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
நாகூரில் அடக்கமாகி அருளும் பாதுஷா நாயகத்தின் மருமகள் ஹலரத் செய்யிதா சுல்தான் பீவி அம்மா சாகிபுவின் பெற்றோரான ஹலரத் செய்யது க்வாஜா மஹ்தூம், ஹலரத் செய்யிதா பீவி பாத்திமா மற்றும் உடன்பிறந்தவர்கள் அடக்கமாகியுள்ள தலமாக விளங்குகிறது மேல நாகூர் தர்கா. இந்த தர்காவின் கந்தூரி விழா நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றன. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்புத் தொழுகையும், அதைத் தொடர்ந்து கந்தூரி விழா கொடியேற்றமும் நடைபெற்றன. பின்னர் பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு இரவு சுமார் 7.30 மணி அளவில் சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. நாகை, நாகூர் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஊர்வசி எடுத்த முடிவு
திரைக்கதிர்

சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வெடித்த வன்முறை: 400 பேர் கைது! | Paris
விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்: பிரேமலதா
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


