செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

"குப்பைகளைத் தெருவில் கொட்டினால் அபராதம்'

மயிலாடுதுறையில் குப்பைகளைத் தெருவில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் பி. கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On :24 ஜனவரி 2019, 2:56 am IST

மயிலாடுதுறையில் குப்பைகளைத் தெருவில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் பி. கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மூலம் நகராட்சி பகுதிகளில் உருவாகும் திடக்கழிவுகளை முறையாகக் கையாளுதல் குறித்த திடக்கழிவு மேலாண்மை திட்ட விதி 2016-இன்படி பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மயிலாடுதுறை நகராட்சி, ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ள உரக்கிடங்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக குவிக்கப்பட்டுள்ள திடக்கழிவுகள் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என இயந்திரங்களைக் கொண்டு தரம் பிரிக்கப்படுகின்றன.
மேலும், நகராட்சியின் 3 இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம்பிரித்து, மக்கும் உரமாக்கி, சுற்றுபுறத்துக்கும், நிலத்தடி நீருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி நுண்ணுயிரி கிடங்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறாக நகராட்சியில் தினமும் உருவாகும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களால் உருவாக்கப்படும் மக்காத குப்பைகளை புதன்கிழமைதோறும், மக்கும் குப்பைகளை மற்ற நாள்களிலும் பிரித்து கொடுக்க வேண்டும். இதனை மீறி குப்பைகளை தெருவில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.