காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புனித சிந்தாத்திரை மாதா திருத்தல ஆண்டு பெருவிழா

சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் புனித சிந்தாத்திரை மாதா திருத்தல ஆண்டு பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :10 மே 2019, 3:58 am

DIN

சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் புனித சிந்தாத்திரை மாதா திருத்தல ஆண்டு பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
விழா கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நவநாள் சிந்தனை நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக முதல்நாள் மலை நாட்டிற்கு பயண நிகழ்ச்சியும் பெத்லகேமிற்கு பயணம், எகிப்திற்கு பயணம் உள்ளிட்ட பயண நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 9-ஆம் நாளான புதன்கிழமை மாலை திருச்சிலுவைப் பணி மற்றும் திருவிழா திருப்பலி இரவு முழுவதும் தேர் பவனியும், 10-ஆம் நாள் வியாழக்கிழமை நன்றி திருப்பலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில், பட்டவிளாகம், பெரம்பூர், மாதிரவேளுர், கீழமாத்தூர், புத்தூர், கொள்ளிடம், அரசூர், ஆச்சாள்புரம், காட்டூர், கொப்பியம், கற்பள்ளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பங்கு இறை மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.