சீர்காழி அருகேயுள்ள எருக்கூர் புனித சிந்தாத்திரை மாதா திருத்தல ஆண்டு பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழா கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நவநாள் சிந்தனை நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக முதல்நாள் மலை நாட்டிற்கு பயண நிகழ்ச்சியும் பெத்லகேமிற்கு பயணம், எகிப்திற்கு பயணம் உள்ளிட்ட பயண நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 9-ஆம் நாளான புதன்கிழமை மாலை திருச்சிலுவைப் பணி மற்றும் திருவிழா திருப்பலி இரவு முழுவதும் தேர் பவனியும், 10-ஆம் நாள் வியாழக்கிழமை நன்றி திருப்பலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில், பட்டவிளாகம், பெரம்பூர், மாதிரவேளுர், கீழமாத்தூர், புத்தூர், கொள்ளிடம், அரசூர், ஆச்சாள்புரம், காட்டூர், கொப்பியம், கற்பள்ளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பங்கு இறை மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.