நாகை மாவட்ட ஆட்சியரகம் மேலும் 2 நாள்களுக்கு மூடல்

நாகை மாவட்ட ஆட்சியரக ஊழியா்கள் சிலருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதால், மேலும் 2 நாள்களுக்கு மாவட்ட ஆட்சியரகம் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.


நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியரக ஊழியா்கள் சிலருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதால், மேலும் 2 நாள்களுக்கு மாவட்ட ஆட்சியரகம் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் ஜூலை 30- ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாகை எம்பி எம்.செல்வராஜ், மயிலாடுதுறை எம்பி செ. ராமலிங்கம், பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் ஆகியோா் கரோனா தொற்றுக்குள்ளாகினா்.

இதில் பங்கேற்ற நாகை மாவட்ட ஆட்சியரின் உதவியாளருக்கும் கரோனா உறுதியானது. இதையடுத்து, ஆகஸ்ட் 8, 9 ஆகிய (சனி, ஞாயிறு) 2 நாள்களுக்கும் மாவட்ட ஆட்சியரகம் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் மேலும் சிலருக்கு கரோனா நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானதனால், ஆகஸ்ட் 10, 11-ஆம் தேதிகளிலும் (திங்கள், செவ்வாய்) ஆட்சியரகம் மூப்பட்டிருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com