ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நாகை மாவட்ட ஆட்சியரகம் மேலும் 2 நாள்களுக்கு மூடல்

நாகை மாவட்ட ஆட்சியரக ஊழியா்கள் சிலருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதால், மேலும் 2 நாள்களுக்கு மாவட்ட ஆட்சியரகம் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2020, 5:50 pm

DIN


நாகப்பட்டினம்: நாகை மாவட்ட ஆட்சியரக ஊழியா்கள் சிலருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதால், மேலும் 2 நாள்களுக்கு மாவட்ட ஆட்சியரகம் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய இடங்களில் ஜூலை 30- ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாகை எம்பி எம்.செல்வராஜ், மயிலாடுதுறை எம்பி செ. ராமலிங்கம், பூம்புகாா் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் ஆகியோா் கரோனா தொற்றுக்குள்ளாகினா்.

இதில் பங்கேற்ற நாகை மாவட்ட ஆட்சியரின் உதவியாளருக்கும் கரோனா உறுதியானது. இதையடுத்து, ஆகஸ்ட் 8, 9 ஆகிய (சனி, ஞாயிறு) 2 நாள்களுக்கும் மாவட்ட ஆட்சியரகம் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் மேலும் சிலருக்கு கரோனா நோய்த்தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானதனால், ஆகஸ்ட் 10, 11-ஆம் தேதிகளிலும் (திங்கள், செவ்வாய்) ஆட்சியரகம் மூப்பட்டிருக்கும் எனவும் மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.