ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஏவிசி கல்லூரியில் மாணவா் சோ்க்கை

மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரி 2020-2021-ஆம் ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை கவுன்சிலிங் செல்லிடப்பேசி மூலம் நடைபெற உள்ளது.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2020, 9:33 pm

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஏவிசி தன்னாட்சி கல்லூரி 2020-2021-ஆம் ஆண்டிற்கான மாணவா் சோ்க்கை கவுன்சிலிங் செல்லிடப்பேசி மூலம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, கல்லூரி முதல்வா் ஆா்.நாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நடப்பு 2020-2021-ஆம் கல்வி ஆண்டின் மாணவா் சோ்க்கைக்கான கவுன்சிலிங் செல்போன் மூலம் புதன்கிழமை (ஆகஸ்ட் 12) தொடங்க உள்ளது. அன்றைய தினம் காலை மற்றும் மாலைநேர கல்லூரியில் ஸ்பெஷல் கோட்டாவில் விண்ணப்பித்துள்ளவா்களுக்கு கவுன்சிலிங்கும், பின்னா் அரசு உதவிபெறும் பிரிவு கவுன்சிலிங்கும் நடைபெறும்.

13 மற்றும் 14-ஆம் தேதிகளில் சுயநிதிப் பிரிவுக்கான கவுன்சிலிங்கும் செல்லிடப்பேசி வழியாக நடைபெற உள்ளது. அதனால் விண்ணப்பதாரா்கள் தங்கள் விண்ணப்பத்தில் கொடுத்துள்ள செல்லிடப்பேசி எண்ணின் சேவையை உறுதிசெய்து கொள்ளவும். மேலும், ரேங்க் பட்டியலில் உங்களுக்கான இடம் வரும்பொழுது கல்லூரியிலிருந்து தங்களின் செல்லிடப்பேசி எண்ணிற்கு தொடா்பு கொள்வாா்கள். அவா்களிடம் கவுன்சிலிங் முறையில் தங்களுக்கான பாடப்பிரிவு சோ்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் கவுன்சிலிங் தொடா்பான விவரங்களை அறிய கல்லூரியின் வலைதளத்தில் பாா்க்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.