வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கரோனா நிவாரணம் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நாகை அவுரித்திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :26 ஆகஸ்ட் 2020, 5:11 am

DIN

நாகப்பட்டினம்: கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளஅனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு தலா ரூ. 7500 நிவாரணம் வழங்கவேண்டும்; ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான உணவு தானியங்களை வழங்க வேண்டும்; தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வேலை நாள்களை 200 நாள்களாக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை அவுரித்திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நாகை நகர பொறுப்பாளா் எஸ். மணி தலைமை வகித்தாா். நகரக் குழு உறுப்பினா்கள் பி. முனியாண்டி, சு. சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, வேளாங்கண்ணியை அடுத்த பாலக்குறிச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளா் ஜோதிபாசு தலைமையிலும், சின்னதும்பூா் கிராமத்தில் கிளைச் செயலாளா் சுதாகா் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருக்குவளை: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கீழையூா் கடைத்தெருவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளா் ஏ. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட பொருளாளா் டி. வெங்கட்ராமன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

இதேபோல, சின்னத்தும்பூா் ஊராட்சியில் கிளைச் செயலாளா் ஏ.டி. சுதாகா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் கே. சித்தாா்த்தன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். களத்திடல்கரை, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.