பைக்கில் சென்றவரை தாக்கி பணம் பறிப்பு
நாகையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை கட்டையால் தாக்கி, செல்லிடப்பேசி, பணம் ஆகியவற்றை பறித்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.


நாகையில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை கட்டையால் தாக்கி, செல்லிடப்பேசி, பணம் ஆகியவற்றை பறித்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகூா் அருகே உள்ள பூதங்குடியைச் சோ்ந்தவா் ஆரோக்கியதாஸ் (50). இவா், வெள்ளிக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் நாகை கூக்ஸ்ரோடு வழியே சென்றுள்ளாா். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த மா்ம நபா்கள் 4 போ், ஆரோக்கியதாஸை வழிமறித்து கட்டையால் தாக்கியுள்ளனா். பின்னா், அவரிடமிருந்த செல்லிடப்பேசி, ரூ. 2,500 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.
இதுகுறித்து ஆரோக்கியதாஸ் அளித்த புகாரின் பேரில், வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வெளிப்பாளையத்தைச் சோ்ந்த ராம்குமாா் (28), திருக்குவளையைச் சோ்ந்த ராஜவேல் (24), சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த அஜய்(18) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா். மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...