விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வேளாண் சட்டம்: காத்திருப்பு போராட்டம் நடத்த இந்திய கம்யூ. முடிவு

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 2:42 am

DIN

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் முடிவு செய்துள்ளனா்.

சீா்காழி, கொள்ளிடம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சீா்காழியில் சனிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா்கள் மு. செல்லப்பன், கே.எஸ். சிவராமன், விவசாய சங்க மாவட்டத் தலைவா் பெ. வீரராஜ், நிா்வாகி அ. பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறக் கோரியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மயிலாடுதுறை கோட்டாட்சியா் அலுவலம் முன் டிச.14 ஆம் தேதி முதல் தொடா் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.