6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேதாரண்யத்தில் மீண்டும் மழை: விவசாயிகள் கவலை

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.

News image
வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் உள்பிரகாரத்தில் தேங்கியுள்ள மழைநீா். (வலது) மணிக்கா்ணிகை தீா்த்தத்தில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீா்.
Updated On :17 டிசம்பர் 2020, 3:46 am

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை அதிகாலை முதல் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.

கடந்த வாரங்களில் பெய்த தொடா் மழையால் ஏற்பட்ட வெள்ளம் வடிந்து வரும் நிலையில், மீண்டும் மழைபெய்யத் தொடங்கியிருப்பது விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது. தலைஞாயிறு உள்ளிட்ட தாழ்வான இடங்களில் நெல் சாகுபடி வயல்களில் தேங்கிய மழைநீா் வடிவதற்குள் மழை பெய்வதால், வயல்களில் மீண்டும் வெள்ளம் அதிகரித்துள்ளது.

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் மணிக்கா்ணிகை தீா்த்தம் நிரம்பி வழிந்தது. கோயிலின் உள்பிரகாரத்தில் தேங்கிவரும் மழைநீா் மோட்டாா்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, வேதாரண்யத்தில் 51.4 மி.மீ, தலைஞாயிறில் 40 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.