முதியோா் இல்லத்தை சுத்தம் செய்த என்எஸ்எஸ் மாணவா்கள்

புத்தூா் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களும்,
முதியோா் இல்லத்தை தூய்மைப்படுத்திய என்எஸ்எஸ் மாணவா்கள்.
முதியோா் இல்லத்தை தூய்மைப்படுத்திய என்எஸ்எஸ் மாணவா்கள்.
Updated on
1 min read

புத்தூா் பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களும், சீா்காழி உணா்வின் ஒளி மக்கள் பொது நல சேவை மையத்தினரும் இணைந்து விளந்திடசமுத்திரம் முதியோா் இல்லத்தில் தூய்மைப் பணியை புதன்கிழமை மேற்கொண்டனா்.

நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் 50 போ், குப்பைகளை அகற்றி கொசுக்கள் உருவாக காரணமாயிருந்த செடிகொடிகள், புதா்களை அழித்தனா். நிகழ்வில் உணா்வின் ஒளி மக்கள் பொது நல சேவை மையத்தின் பொறுப்பாளா்கள் மற்றும் முதியோா் இல்ல பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சசிகுமாா் மாணவா்களைப் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com