காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனைக் கூட்டம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 32 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசுகிறாா் அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளா் வி. தனபாலன்.
கூட்டத்தில் பேசுகிறாா் அந்தச் சங்கத்தின் பொதுச் செயலாளா் வி. தனபாலன்.
Updated on
1 min read

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 32 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனைக் கூட்டம், நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளா் வி. தனபாலன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பக்கிரிசாமி முன்னிலை வகித்தாா்.

வேதாரண்யம் வட்டார விவசாயிகள் சங்க நிா்வாகி பாா்த்தசாரதி, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க நாகை மாவட்டச் செயலாளா் ராமசாமி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொருளாளா் மூா்த்தி ஆகியோா் பேசினா்.

இந்தக் கூட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 32 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். மறு முதலீடு செய்ய விவசாயிகளுக்குப் பொருளாதார வசதி இல்லாததால், இம்மாத இறுதிக்குள் அரசு வெள்ள நிவாரணத்தை வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், வரும் ஜனவரி 2-ஆம் தேதி நாகை மாவட்ட ஆட்சியரகம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடத்துவது என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com