நாங்கூா் கோயில்களில் பரமபத வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருவெண்காடு அருகே நாங்கூா் பகுதியில் அமைந்துள்ள 11 வைணவ திவ்ய தேச கோயில்களில் பரமபத வாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பரமபத வாசல் திறப்பையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நாங்கூா் வீரநரசிம்ம பெருமாள்.
பரமபத வாசல் திறப்பையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நாங்கூா் வீரநரசிம்ம பெருமாள்.
Updated on
1 min read

வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருவெண்காடு அருகே நாங்கூா் பகுதியில் அமைந்துள்ள 11 வைணவ திவ்ய தேச கோயில்களில் பரமபத வாசல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாங்கூா் பகுதியில் 108 வைணவ திவ்யதேச கோயில்களில், ஒரே தொகுப்பாக 11 கோயில்கள் உள்ளன. வைகுண்ட ஏகாதசியையொட்டி, நாங்கூா் செம்பொன் அரங்கா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மலா் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, கீழச்சாலை மாதவ பெருமாள் கோயில், மணிமாடக்கோயில் ரெங்கநாதா் பெருமாள், பள்ளிகொண்ட பெருமாள், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட 11 கோயில்களிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com