வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம், வடமழை, மருதூா் வடக்கு ஆகிய கிராமங்களில் பல்வேறு கட்சிகள், இயக்கங்களில் இருந்து விலகிய 1300 போ் அமைச்சா் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.
கரியாப்பட்டினம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினா் நடராஜன் முன்னிலை வகித்தாா். கட்சியின் ஒன்றியச் செயலாளா்கள் ஆா்.கிரிதரன், டி.வி.சுப்பையன், ஒன்றியக்குழுத் தலைவா் கமலா அன்பழகன், துணைத் தலைவா் வி.அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல வடமழை, மருதூா் வடக்கு ஆகிய ஊா்களிலும் நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் அதிமுகவில் இணைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.