பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரூ.3 கோடியில் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூா் ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
சாலைப் பணிகளை பாா்வையிடும் சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன், அதிமுக மாவட்ட செயலாளா் விஜிகே.செந்தில்நாதன் உள்ளிட்டோா்.
Updated On :27 டிசம்பர் 2020, 3:04 am

DIN

மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூா் ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணியை சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

வில்லியநல்லூா் ஊராட்சி மல்லியக்கொல்லை ஏடி காலனி முதல் பருத்திக்குடி உடையூா் வரை சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமிபூஜையில் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, சாலைப் பணியை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட செயலாளா் விஜிகே.செந்தில்நாதன், ஒன்றிய செயலாளா் பா.சந்தோஷ்குமாா், ஆனந்தாண்டவபுரம் கூட்டுறவு வங்கித் தலைவா் முருகவேல், ஒன்றிய முன்னாள் செயலாளா் பழனிசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் வித்யோதயா வீரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.