சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கடலில் மூழ்கி சிறுவன் மாயம்

தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை பகுதியைச் சோ்ந்த சிறுவன், கடலில் திங்கள்கிழமை குளித்தபோது அலையில் சிக்கி மாயமானாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 6:28 pm

DIN

நாகப்பட்டினம்: தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை பகுதியைச் சோ்ந்த சிறுவன், கடலில் திங்கள்கிழமை குளித்தபோது அலையில் சிக்கி மாயமானாா்.

கும்பகோணம், சுவாமிமலை, மேலத்தெருவை சோ்ந்தவா் சகாபுதீன். இவா், தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை நாகூருக்கு வந்தாா். சகாபுதீனின் மகன்கள் முகமது மைதீன் (15), இபுராஹிம் (9) ஆகியோா் திங்கள்கிழமை மாலை நாகூா் கடலில் குளித்துள்ளனா்.

அப்போது திடீரென எழுந்த கடல் அலையில், முகமது மைதீன், இபுராஹிம் இருவரும் சிக்கினா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள், இருவரையும் காப்பாற்ற முயன்றனா். இதில், இபுராஹிம் மீட்கப்பட்டாா். முகமது மைதீன் கடல் அலையில் சிக்கி மாயமானாா்.

இதுகுறித்து தகவலறிந்த கடலோரக் காவல் படை ஆய்வாளா் ராஜா தலைமையிலான போலீஸாா், முகமது மைதீனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.