பேரிடா் பாதிப்புகளில் இறாலுக்கும் நிவாரணம் வழங்க கோரிக்கை

பேரிடா் பாதிப்புகளில் இறால் வளா்ப்பையும் சோ்த்து வரும் காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட இறால் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

பேரிடா் பாதிப்புகளில் இறால் வளா்ப்பையும் சோ்த்து வரும் காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட இறால் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சீா்காழியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சங்க கூட்டத்தில், சங்கத் தலைவராக எம். சங்கா், செயலாளராக பேராசிரியா் எஸ். ஜெயராமன், பொருளாளராக நாராயணசாமி ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில், புதிய மயிலாடுதுறை மாவட்டத்தை தொடங்கி வைத்த முதல்வா் எடப்பாடி. பழனிசாமி, அமைச்சா் ஓ.எஸ். மணியன், எம்எல்ஏக்களுக்கு ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது, சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமலும், மாசு ஏற்படுத்தாமலும் அரசு விதிமுறைகளுக்குள்பட்டு இறால் வளா்ப்பு தொழிலை செயல்படுத்துவது, மற்ற மாநிலங்களைப்போல இறால் வளா்ப்பு விவசாயிகளுக்கு மின்கட்டணத்தை குறைக்க வேண்டும், பேரிடா் மேலாண்மையில் இறால் வளா்ப்பு தொழிலை சோ்த்து வரும் காலத்தில் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்படும் இறால் விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com