சீர்காழி அடுத்த கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஆண் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்பட்டுள்ளது.
இவர் பணி நிமித்தமாக சென்னைக்கு சென்று வந்தார். சென்னைக்கு சென்று வந்ததால் தாமாகவே தனிமைப்படுத்திக் கொண்டு, கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இந்நிலையில் பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை கரோனா வார்டுக்கு அழைத்து செல்லப்பட்டார் .