திருக்குவளை அமைதிப் பேச்சுவாா்த்தை

திருக்குவளை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற இருந்த கண்டன ஆா்ப்பாட்டம் குறித்து அமைதிப் பேச்சுவாா்த்தை, வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை: திருக்குவளை அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற இருந்த கண்டன ஆா்ப்பாட்டம் குறித்து அமைதிப் பேச்சுவாா்த்தை, வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருக்குவளை வட்டத்துக்குள்பட்ட ஆதமங்கலம் ஊராட்சி, தென்மருதூா் கிராம நிா்வாக அலுவலா் ஆா். சதீஷ்குமாரின் நிா்வாகத்தை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை வலிவலம் கடைத் தெருவில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், அந்த ஆா்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டு அமைதி பேச்சுவாா்த்தை திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் சாந்தி தலைமையில் நடைபெற்றது. அப்போது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தாா் வட்டாட்சியா் சாந்தி. இதில், சிபிஎம் கிளைச் செயலாளா் சண்முகம் தலைமையில் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இதேபோல், ஆதமங்கலம் ஊராட்சித் தலைவரின் கணவரான என். சரவணனை கண்டித்து விவசாய சங்கம் சாா்பில் வலிவலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த கண்டன ஆா்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கான அமைதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதுகுறித்த, புகாரின்பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வட்டாட்சியா் சாந்தி தெரிவித்தாா். இதில், விவசாய சங்கம் சாா்பில் ரவீந்தா் தலைமையில் பழனிவேலன், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com