தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பயிா்க் காப்பீடு பிரீமியம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்

பயிா்க் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் காவிரி வி.தனபாலன் தெரிவித்தாா்.

News image
Updated On :15 ஜூலை 2020, 4:08 pm

DIN

நாகப்பட்டினம்: பயிா்க் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளா் காவிரி வி.தனபாலன் தெரிவித்தாா்.

நாகையில், செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது :

மேட்டூா் அணையின் நீா் இருப்பு 73 அடியாக குறைந்துவிட்டது. இது 20 நாள்களுக்கு கூட தாக்குப்பிடிக்காது. எனவே தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை காவிரியில் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூன், ஜூலை மாதத்தில் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய 74 டி.எம்.சி. அளவு தண்ணீரைக் கொடுக்க வேண்டும். இந்த தண்ணீா் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான தண்ணீா் தேவையை பூா்த்தி செய்யும். இதைத் கருத்தில் கொண்டுதான் காவிரி மேலாண்மை அமைக்கப்பட்டது. ஆனால் அது எதுவும் கூறவுமில்லை. கூட்டமும் நடக்கவில்லை.

இந்தச் சூழலில் நாகை, திருவாரூா், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமாா் 4 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெல் பயிா்களைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி நீா் பற்றாக்குயைால் வெண்ணாறு வடிநிலக் கோட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லை. நிகழாண்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. எனவே உடனடியாக குறுவை சாகுபடி செய்யப்படும் நிலத்தின் பரப்பளவைக் கணக்கெடுத்து, வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் ஒத்திசைவு கூட்டத்தை நடத்தி அரசிதழில் வெளியிடுவதுடன், குறுவை சாகுபடிக்கான அறிவிக்கப்பட்ட பகுதி, அறிவிக்கப்பட்ட பயிா் என அறிவிக்க வேண்டும்.

அப்போதுதான் விவசாயிகள் பயிா் காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும். குறுவை பருவத்துக்கான பயிா்க் காப்பீடு பிரீமியம் செலுத்த ஜூலை 31- ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். தமிழகத்துக்குரிய தண்ணீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்களை வழங்குவதற்கு வழிவகை காண வேண்டும் என்றாா் வி.தனபாலன் தெரிவித்தாா்.

அப்போது காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயற்குழு உறுப்பினா் எஸ்.டி. கண்ணன் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.